
ராமேசுவரம்: தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி எம்.பி நேரில் வலியுறுத்தி அளித்த கடித விவரம்: தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.