• August 6, 2025
  • NewsEditor
  • 0

சாத்தூர்: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், அதற்காக வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று தெரிவித்து விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *