
வேலூர்: “முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக உள்ளதால், அதற்கு மார்க் 50 தான்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
வேலூர் மாவாட்டம் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக மாநகர பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.6) நடைபெற்றது. இதில், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.