
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளது.