
சென்னை: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழைக் காலங்களில் சென்னை அதிகமான மழையை எதிர்கொண்டு வருகிறது. இதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.