
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல்லையில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவர், தன் அக்காவுடன் பேசியதாகக் கூறி, தன் அக்காவுடன் பேசிய அந்த மாணவரை அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டியிருக்கிறார் அவரது தம்பி. இச்சம்பவத்தில் அந்த மாணவியின் தம்பி, அவருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சா‘தீ’க்குள் தென்மாவட்டங்கள்… தொடரும் அரிவாள் அவமானங்கள்! – என்ன செய்கிறது அரசு?
பெரியவர்களிடம் விஷமாகப் பரவியிருக்கும் சாதிய எண்ணங்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் வரை பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் உடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் ஆணவப்படுகொலைகள் நடந்த வண்ணமிருக்கின்றன.
இந்நிலையில் பீகாரில் காதலியின் கண்முன்னே, காதலனை ஆணவப்படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகாரில் டார்பாங்க மெடிக்கல் காலேஜில் நர்சிங் படித்து வரும் 25வயதான ராகுல் குமார் என்ற இளைஞரும், அதே கல்லூரியில் நர்சிங் படிக்கும் தன்னு என்ற பெண்ணும் நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த அழுத்தத்தினால் காதலைப் பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இருவரும் படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டு, கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்திருக்கின்றனர்.
காதலி மடியிலேயே உயிரைவிட்ட காதலன்
இந்தச் சூழலில் திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு ‘சமாதா
னமாகிவிடலாம், உங்களை ஏற்றுக் கொள்கிறோம்’ என ராகுலிடம் சாமர்த்தியமாகப் பேசிய அப்பெண்ணின் தந்தை பிரேம்சங்கர் ஜா, கல்லூரி விடுதிக்கு வெளியே ராகுலை வரவழைத்து தன் பெண்ணின் கண் முன்பே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலின் மார்பிலேயே சுட்டுக் கொலை செய்திருக்கிறார்.
துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த ராகுலின் நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் ஆணவப்படுகொலை செய்த பிரேம்சங்கரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். காவல்துறையினர் பிரேம்சங்கர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த அவரது மகன் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர்.

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ – முதல்வரை சந்தித்த திருமாவளவன்
என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்
காதல் கணவரின் ஆணவப்படுகொலை குறித்து கண்ணீர்விட்டுக் கதறியபடி பேசியிருக்கும் தன்னு, “முகத்தை மறைத்துக் கொண்டு குல்லா அணிந்த டி சர்ட் போட்டுக் கொண்டு ஒருவர் ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தார். அருகில் உற்றுப் பார்த்தப் பின்புதான் அவர் என் தந்தை எனத் தெரிய வந்தது. ராகுலிடம் பேசிக் கொண்டிருந்த என் தந்தை, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலின் மார்ப்பிலேயே சுட்டார். சம்பவ இடத்திலேயே ராகுல் சரிந்து என் மடியிலேயே விழுந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உயிரைவிட்ட ராகுலை என் மடியில் வைத்து கதறி அழுதேன். என் மடியிலேயே, என் கண் முன்னே என் கணவர் ராகுல் உயிரைவிட்டார்.
என் கணவரை ஆணவப்படுகொலை செய்த என் அப்பா பிரேம்சங்கரையும், அதற்குக் காரணமான என் சகோதரரையும், என் குடும்பத்தினரையும் விட்டுவிடாதீர்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இனி இதுபோல யாருக்கும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மிகுந்த அறச்சீற்றத்துடன் கூறியிருக்கிறார் உயிரிழந்த ராகுலின் காதல் மனைவி தன்னு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs