
சென்னை: சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நிதின்சாய் (19) மைலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் அயனாவரம் பி.வி கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) என்ற இளைஞர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி நிதின்சாய் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும், மேலும் சில கல்லூரி நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர்‌.