• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 13-ம் நாளான இன்று, மக்களவை மற்றம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடின. மக்களவை கூடியதும், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதன் 80ம் ஆண்டை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *