
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடமை பாதை (கர்தவ்யா பாத்) அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்துக்கு மத்திய அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள் மாறுகின்றன.
டெல்லியில் முக்கிய பகுதியாக விளங்கிய ராஜ் பாத் (ராஜ பாதை) பகுதியின் பெயரை கர்தவ்யா பாத் (கடமை பாதை) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது. இப்பகுதி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கர்தவ்யா பாத் அருகே கர்தவ்யா பவன்கள் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் அரசு அலுவலகங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது.