
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.
மேலும், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதால் கூடுதல் அபராதமும் செலுத்த நேரிடும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க இந்தியா ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி திட்டத்தை தயாரித்து வருகிறது.