
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட நாளிதழ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன்காரணமாக பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை அடைந்து தனி நாடாக உதயமானது. கடந்த 1971-ம் ஆண்டு போருக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இதுதொடர்பாக கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான நாளிதழ் பதிவை இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமை நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டது.