• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு அமெரிக்கா ஆயுதங்​களை வழங்​கியது தொடர்​பாக இந்​திய ராணுவம் வெளி​யிட்ட நாளிதழ் பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. கடந்த 1971-ம் ஆண்டு டிசம்​பரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்​தியா அபார வெற்றி பெற்​றது.

இதன்​காரண​மாக பாகிஸ்​தானில் இருந்து வங்​கதேசம் விடு​தலை அடைந்து தனி நாடாக உதய​மானது. கடந்த 1971-ம் ஆண்டு போருக்கு முன்​பாக பாகிஸ்​தானுக்கு தேவை​யான ஆயுதங்​களை அமெரிக்கா வழங்​கியது. இதுதொடர்​பாக கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளி​யான நாளிதழ் பதிவை இந்​திய ராணுவத்​தின் கிழக்கு பிராந்​திய தலைமை நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *