
சென்னை: சமூகநீதி என்றால் என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி நாகமோகன்தாஸ் ஆணையம், அம்மாநில முதல்வர் சித்தராமய்யாவிடம் தாக்கல் செய்திருக் கிறது. பட்டியலின மக்களிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வெறும் 165 நாட்களில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.