
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறையும், குறையும் கலந்து உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சியானது காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியிலுள்ள ஓரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக அரசில் நிறையும், குறையும் கலந்து உள்ளது. ஆணவக் கொலை, விசாரணைக் கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன.