
தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உயர்த்தப் பட்ட ஊதியத்தை வழங்குவதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளித்து கூட்டமைப்புக்குக் கடிதம் கொடுத்தால் மட்டுமே, தொழிலாளர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவாதக் கடிதம் வழங்காத தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியக் கூடாது என்றும் அறிவித்தது. இது தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி அங்கு நடக்கும் மற்ற மொழி திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியிருந்தனர்.