
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள தொலைபேசியை ஹேக் செய்து ஒட்டுகேட்டுள்ளதாக, கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவிக்கு, ராமதாஸின் தனி செயலாளர் சுவாமிநாதன் நேற்று புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், “தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் மூலமாக ‘ACT WIFI’ இணைப்பை சசிகுமார் என்பவர் கொடுத்துள்ளார்.
இதில் சிசிடிவி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமதாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் வெளியில் உள்ள நபர்களுக்கு சென்றடைந்துள்ளது.