
மதுரை: வழக்கறிஞர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பார் கவுன்சிலில் புகார் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2020-ல் தாக்கல் செய்த மனுவில், “நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றவும், நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபடும்போது வழக்கறிஞர்கள் கழுத்துப்பட்டை, அங்கி அணிய தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்திருந்தார்.