
மதுரை: பேய், பிசாசுடன் ஒப்பிட்டு திமுக, அதிமுகவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக பதவியேற்றுள்ள அந்தோணிசாமி சவரிமுத்துவை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தை யாரிடத்தில் அடமானத்தில் வைத்துள்ளார்கள், இவ்வளவு நாட்கள் மீட்காமல் என்ன செய்தனர்? தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் பாஜக ஆதரவாளர்கள். எனவே, வட இந்தியர்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கக் கூடாது.