
தென்காசி: அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு ரத்து செய்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார். தென்காசி, அம்பாசமுத்திரம், ஆலங்குளத்தில் நேற்று காலை பிரச்சாரம் மேற்கொண்ட அவர் குற்றாலத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிமுகவில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணியை உருவாக்க வேண்டும்” என்றார்.