• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்​கெனவே அறி​வித்​திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்​து​வேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​காக அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய​மும் இந்​தி​யாவை தொடர்ந்து குறி வைத்து வரு​கின்​றன. இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்து வந்த நாடு​கள், உக்​ரைன் போருக்கு பிறகு ஐரோப்​பிய நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகிக்க தொடங்​கி​விட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *