
சென்னை: திருநங்கையர் மற்றும் இடை பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்ஜிபிடிக்யூஐஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமுதாயத்தைச் சேர்ந்த திருநங்கையர், மருவிய பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நிலைநாட்டக்கோரி சுஷ்மா மற்றும் சீமா அகர்வால் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.