
சென்னை: தமிழகத்தில் சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளது போல தமிழகத்தில் சாதிய கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருகிறது. சாதிய படுகொலைகளை கடுமையான சிறப்புச் சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் என்று அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.