
சென்னை: மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், மாநகர காவல் ஆணையர் என்ன கடவுளா என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் பகுதி மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும் காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ், மாநகர காவல் ஆணையருக்கு கருப்புக்கொடி காட்டியதாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வேப்பேரியில் உள்ள அப்ரோஸின் இல்லத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.