
எழும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு காத்திருப்போர் அறையில் கழிப்பறைகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், இங்கு இயற்கை உபாதைக்காக வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன.
இங்கிருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே தினசரி 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் புறப்படுகின்றன.