
தென்காசி: “வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து கொடுக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு குற்றாலத்துக்கு வந்த அவர், இன்று காலையில் குற்றாலத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, மாற்றுத் திறனாளிகள் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர்.