
‘கைதி 2’ கதைக்களம் குறித்தும், எப்போது தொடங்கும் என்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் ‘கைதி 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் “‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு விட்டுவிட்டோம்.