• August 5, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: “திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதாக கூறும் ஸ்டாலின், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. அதிமுக மக்களை நம்பி உள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலையில் குற்றாலத்தில் இருந்து புறப்பட்ட அவர், தென்காசியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “இந்த பகுதி வேளாண்மை தொழில் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டு முறை பயிர்கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கி னோம். குடி மராமத்து திட்டத்தில் குளங்களை தூர் வாரினோம். பேரிடர் காரணமாக பாதிப்புக்கள்ளான விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை பெற்று தந்தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *