
புதுடெல்லி: ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலின்போது பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கியது இந்தியாதான் என்றும், அதை தங்கள் நாடு அங்கீகரிப்பதாகவும் அந்நாட்டின் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.