• August 5, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமான ஒப்பந்த காலம் 20 நாட்களில் முடியும் நிலையில், இதுவரை 50 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்து கொண்டார்.

விருதுநகரில் வாடகை கட்டிடத்தில் இயங்தி வரும் அரசு அருங்காட்சியகத்திற்காக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.6.80 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2024 பிப்ரவரி 26ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் இக்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதம் 25ம் தேதி உடன் கட்டுமான ஒப்பந்த நிறைவடைகிறது. தற்போது 50 சதவீதம் மட்டுமே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *