• August 5, 2025
  • NewsEditor
  • 0

புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம் மாறி தன்னை திரு​மணம் செய்துகொள்ள வேண்​டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்​பவர் கட்​டாயப்​படுத்தி வந்​துள்​ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்​நிலை​யில், பாக்​யஸ்ரீ வீட்​டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்​று​முன்​தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்​தார். பின்​னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்​தார். அத்​துடன் பல முறை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​னார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீ​ஸார் உடலை கைப்​பற்றி பிரதேச பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். பின்​னர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி சில மணி நேரங்​களில் ஷேக் ரயீஸை கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *