
புர்ஹான்பூர்: மத்திய பிரதேச மாநிலம் நவாரா பகுதியில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்லிமாக மதம் மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்பவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாக்யஸ்ரீ வீட்டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்றுமுன்தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்தார். பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். அத்துடன் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சில மணி நேரங்களில் ஷேக் ரயீஸை கைது செய்தனர்.