• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் ஆய்வு மேற்​கொண்டு அங்கே நடை​பெற்று வரும் பணி​களை விரைந்து முடிக்க அறி​வுறுத்​தி​னார். மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமிநாதன் நேற்று மலர்​தூவி மரி​யாதை செய்​தார். இதைத் தொடர்ந்து நினை​விடங்​களில் நடை​பெற்று வரும் பணி​களை ஆய்வு செய்​தார்.

அண்ணா நினை​விடத்​தில், ஸ்தூபி, சிலை புதுப்​பிக்​கும் பணி, புல்​வெளி​களை பராமரித்​தல், உடைந்​துள்ள பளிங்​குக் கற்​களை சீரமைத்​தல், தரை​யில் மழைநீர் தேங்​காத வண்​ணம் சீர் செய்​யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்​தல் உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *