
ராஞ்சி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81) நேற்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவை எம்.பி.யாக 8 முறை பணியாற்றினார்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை பதவி வகித்தவர். தற்போது 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இதனிடையே உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிபு சோரன் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.