
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவர் தனது பெயரை மாற்றி கோயில் பூசாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவரை போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு உ.பி.யின் ஷாம்லி நகருக்கு அருகில் உள்ள மந்தி ஹசன்பூர் கிராமத்தில் சனி பகவான் கோயில் உள்ளது. இங்கு பாபா பெங்காலி எனும் பாலக்நாத் (55) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாலக்நாத் இந்து அல்ல. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்று அப்பகுதி காவல் நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது.