• August 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ர​யில் பாதைகளை கடக்க முயன்​ற​ போது அடிபட்டு 186 யானை​கள் உயி​ரிழந்​துள்ளன என்று மத்​திய வனத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. நாடு முழு​வதும் வனப்​பகு​தி​கள் வழி​யாக​வும், வனப்​பகு​தி​களை​யொட்டி உள்ள பகு​தி​களி​லும் ரயில்வே தண்​ட​வாளங்​கள் செல்​கின்​றன. வனப்​பகு​தியி​லிருந்து வெளியே வரும் யானை​கள் இந்த ரயில் பாதைகளை கடக்​கும்​போது ரயி​லில் அடிபட்டு இறக்​கின்​றன. இதைத் தடுப்​பது தொடர்​பான ஆய்வை மத்​திய வனத்​துறை அமைச்​சகம் முன்​னெடுத்தது.

இதுதொடர்​பான ஆய்​வு​கள் முடிந்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: நமது நாட்​டில் 2009-10-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்​பாதைகளை கடக்க முயன்ற 186 யானை​கள் அடிபட்டு இறந்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *