
புதுடெல்லி: ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதிகள் வழியாகவும், வனப்பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளிலும் ரயில்வே தண்டவாளங்கள் செல்கின்றன. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் யானைகள் இந்த ரயில் பாதைகளை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறக்கின்றன. இதைத் தடுப்பது தொடர்பான ஆய்வை மத்திய வனத்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.
இதுதொடர்பான ஆய்வுகள் முடிந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது நாட்டில் 2009-10-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்பாதைகளை கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன.