
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள், குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செலுத்த, சில ஹீரோக்கள் அதோடு, காமெடியையும் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன். இவர்கள் நடித்த சில காமெடி படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று ‘நாம் மூவர்’. இதில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் நாகேஷும் இணைந்து கொண்டார்.
வி.கே.ராமசாமி,எல்.விஜயலட்சுமி, ரத்னா, மலேசிய நடிகை மாதவி, பண்டரிபாய், தங்கவேலு என பலர் நடித்தனர். நாகேஷின் அம்மா பண்டரிபாய், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரையும் வளர்க்கிறார்.