• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் அன்​புமணி பேச வேண்​டும் என கூறி​யுள்​ளார்​. இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமகவைச் சேர்ந்த அன்​புமணி, தன் தந்​தை​யான ராமதாஸை எதிர்த்து தமிழகத்​தில் திக் விஜ​யம் செய்ய புறப்​பட்​டிருக்​கிறார்.

வேலூருக்கு வந்து ஒரு பொதுக்​கூட்​டத்​தில் பேசும்​போது, என்​மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்​து​விட்​டு, அதே வேகத்​தில் நான் அமைச்​ச​ராக இருந்து ஆற்​றிய பணி​கள் குறித்து விவரம் தெரி​யாமல் கொச்​சைப்​படுத்தி ஒரு குற்​றச்​சாட்டை என்​மீது சுமத்தியிருக்​கிறார். அதாவது, இந்த மாவட்​டத்​தில் ஒரு அமைச்​சர் இருக்​கிறார். பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்டியதுண்டா என்று முழக்​கமிட்​டிருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *