• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரன் (81) உடல்​நலக்​குறைவு காரண​மாக டெல்​லி​யில் நேற்று கால​மா​னார். அவரது மறைவையொட்டி தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் முன்​னாள் முதல்​வரும், ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்​சி​யின் நிறு​வனரு​மான சிபு சோரன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். சுரண்​டலுக்கு எதி​ரான இடை​வி​டாத எதிர்ப்பு மற்​றும் சமூக நீதிக்​கான அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றால் அவரது வாழ்க்கை வரையறுக்​கப்​பட்​டது. பழங்​குடி​யின மக்​களின் பல்​லாண்​டு​கால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்​று​வித்த அரசி​யல் சக்​தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்​துள்ள மக்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *