
சென்னை: சொத்துப்பதிவின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிமாறப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பதிவுத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சொத்து பரிமாற்றத்தின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டது.