
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களை தற்போதுள்ள பெயர்களிலேயே தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.7-க்கு தள்ளி வைத்துள்ளது.
தமிழக அரசின் திட்டங்களான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ அல்லது உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களையோ பயன்படுத்தக் கூடாது என தடைகோரி அதிமுக எம்.பி.யான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.