• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் 1990-ல் தேர்​வாகி தற்​போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால், 1992-ல் தேர்​வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்​கு​மார், அதே ஆண்​டில் தேர்​வான காவல் உயர் பயிற்​சியக டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் முறையே முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அடுத்தடுத்த இடங்​களில் டிஜிபிக்​களான அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட்​ராமன், வினித்​தேவ் வான்​கடே உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *