
சென்னை: தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சங்கர் ஜிவால் ஆக. 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீனியாரிட்டி அடிப்படையில் 1990-ல் தேர்வாகி தற்போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், 1992-ல் தேர்வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்குமார், அதே ஆண்டில் தேர்வான காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் டிஜிபிக்களான அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே உள்ளனர்.