
பெங்களூரு: முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆபாச குறுஞ்செய்தியும் பலாத்கார மிரட்டலும் விடுத்த 4 பேரை பெங்களூரு போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதானார். அவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.