
ஆண்டிபட்டியில் திமுக எம்பி.- எம்எல்ஏ. பொது மேடையிலேயே பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, எம்பி.க்கு ஆதரவாக நகர் முழுவதும் பல இடங்களில் நேற்று கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கான வரவேற்பு பேனரில் எம்பி. தங்க தமிழ்ச்செல்வன் படம் இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த பின்னர் மேடைக்கு வந்த எம்.பி., இதுகுறித்து அதிகாரிகளிடமும், எம்எல்ஏ. மகாராஜனிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார். அரசு விழாவின் விதிப்படி எம்பி.யின் படம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசினார்.