
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெரினா கடற்கரைக்கு வாரநாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதுவே வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.
குடும்பத்துடன் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டுகள், முதியோர் நடைபயிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்பர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு பேசி மகிழ உணவகங்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்வதால் மெரினாவுக்கு வர, சிறுவர்கள் முதல் முதியோர் வரை விரும்புகின்றனர்.