
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலத்தவர்களை நீக்குவதை பிஹாரில் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் வெளிநாட்டவரை, சட்டத்துக்கு புறம்பாக தங்கி இருப்பவர்களை, இறந்தவர்களை, முகவரி மாறி சென்றவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் வெளி மாநிலத்தவரை சேர்க்கக் கூடாது என்கிறார்கள்.