
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா மோசடிகள் தொடர்பான வழக்குகளில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எம்.பி கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.