
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
‘தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கையின்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வு ரூ.2,000 அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு குறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் 218-வது நிர்வாகக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்து ரூ.2,000 சம்பள உயர்வாக அறிவிக்க வேண்டும்.