
சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் குப்பை போல் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர நடைபாதை வியாபாரிகள் இந்த கடைகளை தங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.