• August 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலரப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் நீங்கள் இப்படி சொல்ல மாட்டீர்கள் என தெரிவித்துள்ளது.

‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 2022, டிசம்பர் 16 அன்று பேசும்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா லக்னோவில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *