
புதுடெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை எம்.பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருவதால், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியான ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, போலந்து தூதரகம் அருகே நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் சுதா காயமடைந்தார்.