
சென்னை: வேறு கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவிய நிலையில், “உடல் மண்ணுக்கு, உயிர் என் உயிர் அதிமுகவுக்கு” என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு கட்சியில் சேரப்போவதாக யூடியூப் சேனல்களில் செய்திகள் வருகின்றன. நான் மானஸ்தன் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும். யார் வீட்டு முன்னாடியும் பதவிக்காக நான் நின்றதில்லை.