• August 4, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் மண்ட்​சவுர் மாவட்​டத்​தில் உள்ள ஜவாசியா கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஷோஹன்​லால் ஜெயின் (71), அம்​பலால் பிரஜாபதி (51). இவர்​கள் இரு​வரும் மிக நெருங்​கிய நண்​பர்​கள். ஷோஹன்​லால் கடந்த இரண்டு ஆண்​டு​களாக புற்​றுநோ​யால் போ​ராடி வந்த நிலை​யில் அண்​மை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

ஆனால் சாவதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் தனது இறுதி ஊர்​வலத்​தின்​போது எனது உயிர் நண்​பர் அம்​பலால் பிரஜாபதி நடன​மாடி என்னை வழியனுப்பி வைக்க வேண்​டும் என்று கேட்​டிருந்​தார். ஷோஹன்​லாலின் கடைசி ஆசையை நிறைவேற்​றும் வித​மாக அவரது நண்​பர் அம்​பலால் இறு​திச் சடங்​கில் பங்​கேற்று கண்​ணீருடன் நடன​மாடி​னார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *